Wednesday, 30 July 2014

கிருஷ்ண லீலா!-11

கிருஷ்ண லீலா!
பக்தர்களை பரவசிக்கும் பெருமாள்,பாற்கடலில் சயனித்திருக்கும் திருமால்
நாராயண எனக் கூக்குரலிட்ட கஜேந்திரனையும் காத்திட்ட கார்மேக வண்ணன்.
மங்கையருள் மாணிக்கமாய் திகழ்கின்ற தேவகியின் திரு வயிறு உதித்தவன்,
தாய்மையின் திருஉருவாம் யசோதையிடம், கொஞ்சி மகிழ மடி புகுந்தவன்,

கெட்டிதயிரை கடத்தில் இட்டு ,மதத்தை அதன் நடுவில் நிறுத்தி சரடை கொண்டு 
இருபுறமும் இறுக்கி பிடித்து இழுத்து விட்டு லாவகமாய் அன்னை தயிரை கடைய 
பாற்கடல் கடையும் பொழுது கூர்மாவதாரம் கொண்டு மலையை  தாங்கியவன் 
பசி தாளாமல் கண்கள்  கசக்கி அதரம் பிதுக்கி செல்ல சினுங்கல் லீலை புரிய 

ஏதும் அறிய அன்னை நல்லாள் செய்யும்  தொழில் விட்டு சனத்தில் விரைந்தாள் 
மகன் தனை தூக்கி மடியில் நிறுத்தி  கண்ணே கனியமுதே என கட்டியணைத்தாள் 
சற்று கணம் பொறுப்பாய் மகனே வெண்ணை திரண்டு வரும் நல்  வேலை இது என 
நறுமணம் கமழும்,பசும் வெண்ணை வழித்து அழுத வாயில் புகட்டிவிட்டால் 

வெண்ணை உண்ட கண்ணன் மகிழ்வில் தானும் மகிழ்ந்து இன்னும் கொஞ்சம் 
அவன் வாயில் வைத்து அவன் சுவைப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்ந்து என்
செல்லமே கண்ணப்பா ,இதை உனக்காக செய்து வைத்தேன் செல்லப்பா.
என் நிகரில்லா செல்வமே கண்ணையா உன் சிரித்த முகம் இங்கு காட்டையா!


பால லீலா!
ஆதிசேசன் ஆயிரம் தலைகளினால் பாடினாலும் ,முடிவற்றது அவன் பெருமை,
ஆயிரம்,ஆயிரம்,உபதேசங்களை தன் பவள வாயினால் உதிர்த்த மணிவண்ணன்,
யசோதை நந்தரை  அன்னை தந்தையென்றும்,பலராமனை அண்ணாஎன்றும்,
அழைக்க பழகியிருந்தான் ஆராவமுதன் என பெயர் பெற்ற ஆயர்பாடி மன்னன் 

கண்ணன் அவன் நந்தரின் இல்லத்தில் நடுவில் உள்ள பளிங்கு மாளிகை  முற்றத்தில்  
தன் சின்னஞ்சிறு பாதம் தூக்கி தமையனுடன் ஆடுகின்றான் ,மழலையில் பாடுகின்றான் 
வீதி சென்று கருப்பு,வெள்ளை பசுக்களை அதன் கன்றுகளை பெயரிட்டு அழைகின்றான்.
வீட்டில் உள்ள வெண்ணைதனை,கைநிறைய அள்ளி வாயில் வைத்து சுவைக்கின்றான் ,

 தன் பிம்பம் தனை,மணி மண்டபத்தில் பார்த்து பெரும் மகிழ்ச்சி ஒலி எழுப்புகின்றான்,
கொஞ்சும் சலங்கை மணி ஒலிக்க ஓடிசென்று அவனுக்கு அவனே முத்தமிடுகிறான் 
அன்னை யசோதையவள் தன் மைந்தனுக்கு பாலுட்ட பலவிதமாய் முயலுகின்றாள் 

வெண்ணை உண்டு ருசித்த மகன் தன் அன்னையிடம் பாலினை மறுத்தளித்தான் 

பால் நிறைய குடித்தால் தான் பெரியவனாய் ஆகிடலாம் எனஅன்னையவள்  புகட்ட,

அதனை  மறுக்கும் மைந்தன் இவிதமாய் பல புகார்கள் இயம்புகின்றான் தாயிடம் பாலருந்துவதால்  அண்ணாவைப்போல் பெரியவனாய் ஆகிடலாம் என்று சொன்னாய்,
கால்கள் கரும்பாம்பெனவே தரையினில் ஊன்றி நின்றிடலாம்  என்றும் சொன்னாய்,

இவ்வளவு பால் குடித்தும் சிறியவனாய் தான் உள்ளேன்,அண்ணனை போல் இல்லை,
நீ சொன்னது போல் ஒன்றும் ஆகவும் இல்லை,
நீ ருசியற்ற பச்சை பாலை தருவதனால் 

அதை குடிப்பதிலே ப்ரியம் ஒன்றும் இல்லை,எனவே சுவையான பட்சணம் தந்திடுவாய் 
நன்றாக சமைத்த சுவையான ரொட்டியும் ,வெண்ணையும் தருவாய் என் அன்னையே

செப்பு வாய் திறந்து ,மழலை மொழியினிலே மைந்தன் சொல்ல தனை மறந்து 
தன் மெய்யும்  மறந்து கேட்டு சிலைஎனவே நின்றால் யசோதை தானே!

Tuesday, 22 July 2014

கிருஷ்ண லீலா-10

கிருஷ்ண லீலா-10


கண்ணன் தவழ்தல்;
முகுந்தன் முன்னங்கால் மண்ணில் பட கைகளை கூட்டி தவழ்கின்றான் 
நந்தர் தம் மாளிகையில் செம்பொன் தூண்கள் சூழ் நடு முற்றத்தில் 
கைகளை முன்னால் வைத்து,கால்களை அதனுடன் கூட்டி தவழ்கின்றான்


அவன் அசையும் பொழுதினிலே இடைதனை அலங்கரித்த மேகலை ஒலி எழுப்ப 
தான் நகரும் அழகினை தானே தூணில் கண்டு குதூகல குரல் எழுப்பினான் 
மற்றொருவன் துணையாய் விளையாட கிடைத்தான் என்று களித்திட்டான் 

எதிர் தவழ்ந்த ,தன் பிம்பம் நோக்கி,பால் பற்கள் தெரிய நகைத்தான்.
தன் மகன், செய்கை கண்டு மனம் மகிழ்ந்த அன்னை புன்னகை பூத்தாள்.
பரம்பொருளே,தரையினில் தவழ்ந்திட பூமித் தாயும் சிலிர்த்தாள் 





















உலகம் காட்டல்
தவழ்ந்த கண்ணன் ,தவழ்ந்த படி, படி  தாண்டி வீதியில் இறங்கிட்டான் 
தாய் காண பொழுதினிலே பிடி மண்ணை தன் செம்பவள வாயில் இட்டான்.
தாயவள் தன் மகனின் வாய் நிறைத்த மண் துகளை கண்டு விட்டால் 
கம்பெடுத்து,வேகமாய் விரைந்து வந்து ,தன் மகனை அதட்டி கேட்டாள்


ஆவென காட்டு,மண் அள்ளி வாயில் போட்டது உண்மைதானே என்று,
தாயிடம்,ஏதும் அறியா பாலகனாய் பொக்கை  வாய்  திறந்துக் காட்ட,
அதனுள்ளே ஈறேழு  உலகும் தெரிய,தாயும்,மகனும் சேர்ந்து தெரிய,
தலை சுற்றி,கண்மூடி ,நாவரண்டு மூர்சையுற்றால் நந்தன் ராணி.


நடை பயிலுதல்.

அன்னையவள் யசோதை,தன் கண்மணிக்கு நடை பயிற்றுவித்தால் .
மூன்று  உலகினையும் தன் மூன்றே  அடிகளினால் அளந்தவன் அவன் 
மகாபலியின் சிரசினிலே தன் பாதம் வைத்து பாதாளம் அனுப்பியவன்.
இன்று,அன்னையவள் கைபிடித்து ஒரு ஒரு அடியாக நடை பயின்றான்.


வைக்கும் அடி தடுமாறி,கீழே விழுந்திடுவனோ, புண்படுவனோ,என  பரிதவித்து கண்ணன் அவன் கைபிடித்து நடத்துகிறாள் மெல்ல மெல்ல பயிற்றுவித்தாள் 
யசோதை ,தத்தி தத்தி நடந்த மகன் நேர்நடை நடக்க கண்டு மகிழ்ச்சியுற்றாள் .
தான் கண்ட காட்சியினை,தன் மனாளனுக்கும்,மற்றவருக்கும் காட்டுகிறாள்.


தன் மூத்த மகன் பலராமனை அழைத்து, தம்பியுடன் விளையாட பணிக்கின்றால்.
தயங்கி,தயங்கி நடை பயின்ற கண்ணன் முற்றம் வரை சென்று விட்டு திரும்புகிறான் .
நிலை படியை தாண்ட ,முயன்று கீழே விழுந்து எழுந்தான் மூஉலகம் அளந்த பெருமாள்.
தன் மகனின் முயற்சியினை கண்ணுற்ற தாயவள் ,கைபிடித்து படியிறங்க படிப்பித்தால் .


யசோதையுடன் கண்ணின் விளையாட்டை கண்டு மகிழ்ந்தது அந்த வானுலகம் 
என்ன தவம் செய்தனையோ யசோதை என வியப்புற்றார் அமருலகின் தேவர் 

அவள் பெற்ற வரத்தினை மெச்சி மெய்சிலிர்த்தனர் மெய் ஞான முனிவர் 
இவை ஏதும் அறியாத அன்னையவள் மகன் மேல் கண் பதித்து காத்து நின்றால்.

Monday, 14 July 2014

கிருஷ்ண லீலா-9

கிருஷ்ண லீலா-9
யசோதையின் ஏக்கம்.
அசுரர்களை,அரை நொடியில் சம்ஹாரம் செய்யும் அனந்த மூர்த்தி அவன்
மூர்த்தி சிறிதாய் இருக்கும் போதே ,கீர்த்தி பல பெற்ற பெருமாள் அவன்
இத்தனை சிறப்பினையும் வாய்க்கபெற்ற தன் மகனை அறியாத அன்னையவள்
தனது அன்பு மகன் பெரியவனாய் வளர்வது எந்நாளோ என ஏங்குகின்றாள்!


பக்கத்திலே திருமகள் வீற்றிருக்க பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன்
இடையவரின் இல்லத்திலே நாற்கால் தொட்டிலில் சத்தை சயனித்திருக்க 
முட்டி மண்ணில்பட கரங்கள் தரையில் ஊன்ற,நாலுகால் பாய்ச்சலாக தன் 
மகவு நந்தர் இல்லமதில் தவழ்ந்து வரும் அழகை காண ஆவலுற்றால்.


மூவுலகும் பாதத்தால் அளக்க மூன்றாம் பாதம் மகாபலி தலையில்வைத்தான்,

வாமன மூர்த்தி அவன் தத்தி,தத்தி நடக்கும் நடை காண ஏக்கம் கொண்டாள் 
உபதேசம் உதிர்த்த பவளவாய் அச்சுதன் அமரர் தொழும் லட்சுமியின் நேசன்.

திருவாய்கொஞ்சு மழலை மொழியால் அம்மா என அழைக்க தவமிருந்தால்.


அற்புதம் ஆயிரம் செய்யும் நெடிந்துயர்ந்த பெருமாள் என பெயர் பெற்றவன் 
கை கால் உதைத்து ,அழுதுப் புரண்டு அண்டம் நடுங்க அடம் செய்வானோ
அனைவர்க்கும் அனுதினமும் படியளக்கும் வைகுண்ட வாசவன் அவன் 
தன் 
நீல வண்ண பிஞ்சு கையால்,சிந்தி சிதறி ,அன்னம் அள்ளி அள்ளி உண்பானோ

என தன் உயிரெனவே போற்றி வளர்க்கும் தன மகனை சிந்தையில் நிறுத்தி 
யாவையுமே கற்பனையில் கண் குளிர கண்டு இன்புற்றாள் அன்னை யசோதை
அவள் தன் அகத்தில் கண்ட காட்சி தன அகம் தனில் அரங்கேறும் நாளும் வந்தது
 என்ன தவம் செய்தனை யசோதை மையா என தேவரும் முனிவரும் போற்றினர்.
கண்ணன் வளர்தல்
குப்புற விழுதல் 
மூன்று மாதம் முடியும் முன்னே  உடல் தூக்கி குப்புற விழுந்தான் கண்ணன்
இதை கண்டு,தேங்காய் தலை சுற்றி திருஷ்டி கழித்து உடைத்தால் அன்னை.
வயிறு அமுங்கி வாய் மூக்கு தரையில் பட்டு அடிபடவே அழுதான் கண்ணன் 
தான் கற்ற முதல் வித்தை தனை விடாமல் பலமுறை முயன்றான் வண்ணன்
எத்தனை முறை விழுந்த போதும் சலிக்காமல் பூ போல திருப்பி விட்டால்அன்னை.

கண்ணன் அமுதுன்னல் 
ஆவணி அஷ்டமியில் அவன் பிறப்பு,ஆறுமாதம் கழிந்தது ஆயர்பாடி வந்தடைந்து.
இன்று தன் குழந்தைக்கு முதல் அன்னமிட குருவாயூர் சன்னதி அனைவரும் நாட.
அன்று அன்னை பரந்தமனுக்கே அன்னமிடஅனைவரையும்அழைத்திட்டாள் 
அன்னம் 
ஒருவாய் அவனுள்ளே சென்று அடைக்கலம் புக அவனி அடைந்தது நிறைவு!


அன்புசார் கோபரும் கோபியரும் நந்தரில்லம் வந்தனர் 
கண்ணன் அவன் பசியாற தன் மனம் நெகிழ்ந்தனர்.
ஆனந்தமாய் ஆட்டம் ஆடி வாழ்த்து பாடி மகிந்தனர் 
நந்த மைந்தன் சுந்தர முகம் கண்டு கழித்தனர்!

Monday, 16 June 2014

கிருஷ்ண லீலா-8


ஆலிலையில்  கிருஷ்ணன்,

நந்தரின் இல்லமது,அமருலகின் தேவரெல்லாம் வணங்கும்,
பாற்கடல் பள்ளிகொண்ட பரந்தாமனின்  இருப்பிடமானது.
முற்றத்திலே உள்ள தூளியிலே சயனித்திருந்தான்,கண்ணபிரான்,
கை கால் ஆட்டி,பொக்கை வாய் சிரிப்புடனே,அறியாபிள்ளையாய்!


தன் கால் கட்டை விரல் தூக்கி வாயினிலே வைத்தான்,கண்ணப்பன்,
கடல் அலை சீற்றமாய் சீறியது வானம் வரை ,புவி நடுநடுங்கியது,
மேகம் கடும் கர்ஜனை செய்ய, வானில் வண்ண கோலமிட்டது மின்னல்.
கணப்பொழுதில் வந்த மாற்றம்  ஏதேன அறியாமல் கலங்கியது ஏழுலகும் 

 நாரதரும் என்ன இந்த விபரீதம் என நான்முகனை வினவ,தேவரெல்லாம் 
கயிலை நோக்கி அபாய கரம் நீட்ட,சிறுமுறுவல் தந்து புதிர் அவிழ்த்தார்,
மால் ஒரு பாகாம் கொண்ட சங்கரனார்,இது தன மனையாளின் சோதரனார் 
விளையாட்டை செய்த லீலை என்று.ஏதும் விளங்காமல் விழியுயர்த்த.

கால் கட்டைவிரல் தனை வளைத்து,தன் அதரம் தனில் வைத்து சுவைத்ததனால் 
வந்த விளைவு இது, ஆலிலையில் கிருஷ்ணன் ரூபம் இது, இந்த வடிவம் 
தாங்கி கண்ணன் இருந்தால் பிரளயம் வரும் என்றொரு ஐதீகம்,நொடிபொழுதில் 
மாயம் செய்த மாயவன்,விரைவினிலே விடுவித்தான் விரலை வாயை விட்டு.




காக அரக்கன்

கம்சன்,தன் உயிர் மேல் கொண்ட பற்றின் காரணமாய் 
பூதனயை அனுப்பிய முதல் முயற்சி தோற்ற பின்னே 
காக்கை வடிவம் கொண்ட அரக்கனிடம் ஒப்புவித்தான்,
பாலகனை பலிக்கொண்டு வரும் பெரும் பணியை.

சிறு பிள்ளை விணை தீர்க்க நான் வேண்டுமோ என இளப்பமாய் 
எண்ணி விரைந்திட்டான் காக்கணும் இடையர்கள் அகம் நோக்கி.
நந்தரின் மாளிகை  மேல் பறந்து வந்தமர்ந்தான் முற்ற மதிலினிலே.
அக்கனமதில் உறங்கிட்ட மகனை விட்டு ,அன்னையவள் அகன்றிருக்க,

தக்க சமயம் என இறங்கிட்ட அரக்கன், கண்ணன் அருகினிலே சென்று,
தன் அலகினாலே கொத்த முற்பட்டான்,அவனை கையால் திருகிட்டான் மாயன்
கண்ணன் கையில் குற்றுருயிராய் இருந்த காகன் கரைந்திட்டான் உயிர்பிச்சை 

கேட்டு,மனம் இறங்கிட்ட மாதவன் காகனை  திருப்பி அனுப்பிட்டார் கம்சனிடம்,

காக அரக்கன்,அலறி துடித்தபடி ,விரந்திட்டான் மதுரா நகர் நோக்கி கம்சனிடம்.
கோகுலத்தில் இருப்பது, மானிட குழந்தயன்று,தெய்வமே மனிதனாய் வந்தது,

இனி,அதனிடம் நம் ஆட்டம் செல்லாது,நம்மினமே அழியும் அவன் கையால் என்றான்!

Wednesday, 11 June 2014

கிருஷ்ண லீலா-7


பூதனை வதம்  


மருகனை காணாமல் மருகினான்  மாமனாம் கம்சன் மதுராவில்.
சோதரி தொலைத்த மகனை சீரட்டவோ, இல்லை சிரம் வெட்ட.
கோகுலம் கொண்ட கோலாகலம் சொல்லாமல் சொல்லியது 
இங்கு குழந்தை பிறந்து மறைந்த  அன்று அங்கு மலர்ந்ததை 

தன்  உயிர்க்கு காலன் என ஐயம் கொண்டாலே போதும் கம்சனுக்கு 

அக்கனம்  பிறந்த அத்தனை சிசுவையும் சிரமறுக்க அனுப்பிவைத்தான் 
பூதம் போல் உரு கொண்ட அரக்கியாம்,மாயம் பல கற்ற மாபாதகியை 
குழந்தை தனை யமனுலகம் அனுப்பிவைக்க, ஏவினான் பூதனையை.

கோரா முகம் கொண்டவள் கோமள வல்லியாய் கோலமிட்டு 
அழகு சுந்தரியாய்,கபட உரு கொண்டு,கோகுலத்தில் உட்புகுந்தால் 
பால் சுரக்கும் ,புண்ணிய தனங்களிலே விஷம் தடவி விரைந்திட்டாள்,
கண்ணன் தனை காண வரும் மாது போல் ,அவனருகே அமர்திட்டாள்,


யசோதையின் பாக்கியத்தை பற்பல சொல்லால் வாயார புகழ்ந்திட்டால் ,
தன் மகவுதன் புகழ்ச்சியினால் மயங்கிட்ட அன்னை அரக்கியென்று  

அறியாமல் முழுமனதாய் நம்பி,உறங்கும் மகனை விட்டு சற்றே 
அகன்றிட்டாள் நேரம் செல்ல,செல்ல,ஒவ்வொருவராய் வெளி செல்ல,

யாருமற்ற நேரத்திலே,மாதவனை ஏந்திட்டால் தன் கரத்தினிலே 
தன் விஷம் தோய்ந்த மார்பினின்று பால்தனை புகட்டிட்டாள் 
பால் மட்டும் அருந்தும் பாலகனா இந்த மாயன்,பாலுடனே சேர்த்து 

அவள் உயிர் தனையும்  உறிஞ்சிட்டான்,அலறிட்டாள்  அரக்கி.


தன் உயிர் போவது உறுதி என அறிந்திட்ட பூதனை,குழந்தையை
குழந்தையென வந்த தன் காலனை விலக்கவும் இயலாமல் அவனுடனே 
வீட்டை விடுத்து  காடு புகுந்தாள்,தன் உயிர் போகும் வேளையில் 

வேதனையில் வீறிட்டாள் ,வீழ்ந்த பின்னே,தன்  உருவம்  பெற்றாள், 

மலைபோல் வீழ்ந்திருந்த பூதனை மேலே கண்ணன் வீற்றிருந்தான் 
அவதார நோக்கில் முதல் பலி அரங்கேற்றி முறுவல் புரிந்திருந்தான் 
அன்னையவள் அலறி வந்தநிலை கண்டு தானும் சேயாகி சினுங்கிட்டான் 
நிகழ்ந்த லீலை அறியாத யாதவ இனம் அதிர்ச்சியில் உறைந்திட்டது.



Wednesday, 4 June 2014

கிருஷ்ண லீலா.6

யசோதையின் தாலாட்டு.

ஆயர் பாடி மாளிகையில் மாயவனை துயில செய்ய தொட்டிலிலே இட்டு,
அவன் மலர்முகத்தில் கண் பதித்து தாய்மை பொங்க முத்தமிட்டு,அள்ளி 
அணைக்கின்றாள் ஒரு பொழுது,கொஞ்சி குலவுகிறாள் மறுபொழுது !
கொஞ்சுமொழி வார்த்தைகளால்,மெல்லிய குரலெடுத்து முனுமுனுத்தாள் 
தாலாட்டு பாடலிலே நித்திரையை அழைகின்றாள்அன்பான யசோதை!

நித்திரா தேவி நீ ,தச்சனமும் நில்லாமல் இப்பொழுதே வந்திடுவாய்.,

என்மகவுதனை  ஆரத்தழுவி நீ உன் வசமே பத்திரமாய் வைத்திடுவாய் 
அவன் கனவதனில் இனிமைதனை சேர்த்து இன்பமதை தந்திடுவாய்.
ஆயிரம் கோப,கோபியர் அவனை ஆரத்தழுவ ஆர்வமுடன் தவமிருக்க,
அவனருகே செல்வதற்கு நான் ரகசியமாய் உனை அனுமதிப்பேன் 

நித்திரை பெண்ணே நீ வேறெங்கும் செல்லாமல் என் அகம் வந்துவிடு 
என் செல்ல கண்ணையன் உன்னை ஆசையுடன் அழைக்கின்றான் 
தாமதம் இன்றி நீ தாவி அவனிடம் வந்துவிடு ,என அன்னையவள் 
ஆசையுடன் தாலாட்ட,தன லீலை தனை காட்ட தக்க தருணமிது என்று 
தன் இமை மூடி,அதரங்கள் சப்புக் கொட்டி பாவனை காட்டிட்டான் கண்ணையன் 

அன்னையின் அவள் தன் அழைப்பின் பேரில் நித்திரையும் வந்திட்டால்
கண்ணனிடம் தான் மயங்கி அவள் ,அவனிடமே சரணடைந்திட்டால் என 
கண்ணன் ,அவன் உறங்க கண்டு,யசோதை தன் தாலாட்டை நிறுத்தி,அருகே
உள்ளவரை அமைதி காக்க சைகை செய்து ,அனைவரையும் அனுப்பிவிட்டு,
வெளிச்சம் தனை மறைத்து விட்டு,பட்டு துகில் கொண்டு போர்த்திவிட்டு 

தன் மகன் எழுவதற்குள் மற்ற வேலை முடிக்க செல்ல யசோதைமுனைகையிலே,

செல்ல சினுங்கள்,சில செய்து,தனகத்தே அழைத்து கொண்டான் மாயக்கண்ணன் 
இதுபோலே,உறங்குவதும்,விழிப்பதுமாய்,மாதவன் விளையாடி ,தாய்மையிலே 
உறவாடி,வையகத்தில் இவள் போலே என தாய்மைக்கு ஓர்  பெயர் வழங்கி, யசோதை 
செய்த பாக்கியம் என்னவென்று பாரில் உள்ளோர் வியக்க வைத்தான் பரந்தாமன்!




Tuesday, 22 April 2014

கிருஷ்ணா லீலா-5

கோகுலத்தில் குதூகுலம்!

தேவரின் கடவுள் ,அசுரரின் காலன்!லட்சுமியின் நேசன்,பாற்கடலின் வாசன்!
அவன் திரு நாமம் சொல்ல ஆயிரமாயிரம் காலம் தவம் செய்திடவேண்டுமென 
வானவரும்,ஞானியரும் பாற்கடலின் வாசலிலே ,பேட்டி காண காத்திருக்க,
முன்னம் அயோத்தி மக்கள் செய்த தவ புண்ணியமாய் ராமவதாரம் தந்தவன்!


இன்று கோகுலத்து மாந்தர் தம் துயர் களைய கிருஷ்ணாவதாரம் கொண்டான்!
ஆயர்குலம் என்ன தவம் செய்ததுவோ,பரந்தாமன் இவ்விடத்தில் வந்திடவே!
கோகுலத்து கோபி ஒருத்தி, தெருவெல்லாம் ஓடோடி சொன்ன செய்தி இதுதானே!
நந்தர் தம் மாளிகையில் ,நந்தராணி யசோதை,பெற்றெடுத்தாள் ஆண் மகவை!


அவன் பொன்னழகை பார்பதற்கு நம் கண்ணிரண்டு போதாதே !
அவன் மின்னும் கண்கள் விட்டு நம்மை மீட்டெடுக்க முடியாதே!
சுருண்ட கரும் கேசமது ,முகத்தில் வழியும் அழகுதனை கண்டு பிறவி பயண்,பெற்றிடவே,ஓடோடி வாரீர் !எம்குல கோபியரே!


கண்ணன் பிறந்த நற் செய்தி ,காட்டு தீ என கோகுலம் முழுதும் பரவியதே.
கோபர்களும் கோபியரும், கூடியதால், நிறைந்தது நந்தர் இல்லமதே!

ஒருவர் உள் செல்ல ,கண்டுவிட்ட மற்றொருவர் மகிழ்வுடன் வெளி செல்ல,
கண்டு வந்தவரின் வாழ்ததனை,தக்க முறையில்  பெற்று கொண்டு,


வந்தவரை உபசரிக்க,பாலும் தயிரும்,பானகமும்,நீர் மோரும் என,
வேண்டியவர்,வேண்டியபடி ,விதவிதமாய் மகிழ்வுடனே  உபசரித்து,
நடு,நடுவே தன் மகன் முகம் கண்டு ,பம்பரமாய் சுழலுகிறார் நந்த ராஜன்,
களைப்பு சிறுதும் முகம்தனிலே இல்லாமல் தாய்மையுடன் நந்தராணி!


கோபிகைகள் புடைசூழ,யசோதையவள் வீற்றிருக்க,தாயவளின் மடிதனிலே ஒய்யாரமாய் நந்தன் மகன்,பார் போற்றும் பரந்தாமன்,பச்சிளம் பாலகனாய் !
தாயன்பு என்பதிலே சுகம் கண்ட நாராயணன் மாற்றுமுறை எடுத்தான் நரனாய்!

சுற்றி நின்ற கோபியர்கள் திருமகளின் நாயகனை சிறப்புடனே அலங்கரித்தனரே!


ஒரு கோபி நெற்றியிலே செந்திலகமிட,மற்றொருத்தி கண் அதனில்  அஞ்சனமிட,
கைதனிலே வளையலும்,பட்டு வங்கி குஞ்சலமுடன் இட.பாதகமலத்தில் தண்டை இட இடையினிலே அரைஞான் கொடியிட,
 பட்டு சொக்காய் மஞ்சள் வண்ணத்தில் மின்னிட 
சிரம்தனில் முத்தும்,ரத்தினமும்,வைரமும் கோர்க்க பெற்ற வண்ண தலை பாகை இட

துஷ்டர் கண் தன மகனை தீண்டாமல் அன்னை யசோதை திருஷ்டி பொட்டு இட 
பூரண அலங்கார பூசனமாய்,பாலகிருஷ்ணன் முகம் கண்ட பின்னே, மெய் மறந்து 
கிழவர் முதல்,சிறுவர் வரை நின்ற நிலைதனை வர்த்தைதனில் வடிக்க இயலுமோ.
கிருஷ்ண பக்த சிரோன்மணிகள் மகாகவிகள் எழுத்து வரி கொடுக்க தவிக்கையிலே 
அதை மானசீகமாய் கண்டு மகிழ்திடவே உம்மிடமே விட்டு விட்டேன் முயன்றுடுவீர்!

       

       

Sunday, 20 April 2014

கிருஷ்ண லீலா-4


ஆயர் குல கொழுந்து 

மதுரா நகரில் மாயவனும்,அவன் சோதரி மாயையும் மாயமாய் மறைந்திருக்க,
தாய் தேவகியின் அகம் விட்டு வந்த தேவகிநந்தன்,ஆயர்பாடி அரண்மனையில் 
அப்போதுதான் பிறந்த பிள்ளை போலே வீரிட்டு அட்டகாசமாய் அழுகுரல் கொடுக்க 
மயக்க நிலை மீண்ட  நந்த ராணி, யசோதை, விழிதெழுந்தாள்,தாய்மை பொங்க!

அருகினிலே கருநீல வண்ணமாய் அழகிய ஆண் குழந்தை அழுதபடி இருக்க ,
நடந்த மாயம் ஏதும் அறியாள் இந்த மங்கை நல்லாள் !அருகிருந்த தன் மகனை 

விழி மலர கண்டு மகிழ்ந்தாள் எத்தனை புண்ணியம் செய்தனவோ இந்த கண்கள் !
யுக,யுகமாய் செய்த தவப்பயனை பெற்றனவோ அவள் தன  நயனங்கள் !


பார் போற்றும் பரந்தாமன் ,பருப்பொருளாய் பக்கத்தில் உற்றான்,அவள் மகனாய்!
பார்த்த விழி பார்த்த படி இருக்க,யசோதை கூவி அழைத்தாள் தன் மணாளனை!
ஆயர் குல கொழுந்தாம்,கண்ணனை,காண வந்தார் நந்த ராஜன் !நந்தன் அவர் தன் 

கண்-அவன்,கண் நிறைந்த கண்மணி,பசித்த வயலுக்கு மழைபோல வந்தவன்!

தன் பிள்ளையாய் வந்த ஆயர் குலகொழுந்தை கண்டவுடன்,பேச மறந்து நா தழுதழுக்க,
கண்ணீர் மல்க ,உள்ளமெல்லாம் புலன்கிதம் அடைய,உடலெல்லாம் புல்லரிக்க,
நெஞ்சு மட்டும் மகிழ்ச்சி பொங்க,ஆனந்த வெள்ளத்தில் தத்தளித்தார் நந்தகோபர்!
வம்சம் வளர்க்க வந்த பிள்ளை என,கண்ணுற்ற பெற்றோர் பெருமிதமுற்றனர்!

தங்களுக்கு ஒரு பிள்ளை தவப்பயனால் பெற்றெடுத்தோம் என பெற்றவர் மகிழ்ந்திருக்க.
அடுத்த தலைமுறைக்கு தலைவன் வந்துவிட்டான் என ஆயர்குலம் நினைத்திருக்க,
இந்த தரணியில் தர்மம் தவறாது பிழைத்திருக்க,அவதாரம் தாங்கி வந்தான் கண்ணன்!
அடாத செயல் புரியும் அரக்கர் கருவறுக்க,வைகுண்டம் விட்டு வந்தான் முகுந்தன்!



Saturday, 19 April 2014

கிருஷ்ண லீலா-3


கம்சனின் கலக்கம் !
வராகமாய் புவனி சுமந்த புரந்தரனை ,சிரத்திலே சிந்தை இன்றி சுமந்து 

வசுதேவர் யாதவர் வாழ் கோகுலம் சென்று செம்மையாய் திரும்பிவிட்டார்,
கண்ணனை அவ்விடம் விட்டு,மாயையை இவ்விடம் சேர்த்துவிட்டார் ,
சிறைக்கூடம் பழையபடி மூடிக்கொள்ள,
விழித்து எழுந்தனர் காவலர்.

குழந்தை அழுகுரல் கேட்ட்க காவலன்,விரைந்திட்டான் கம்சனிடம் !
தேவகியின் எட்டாவது குழந்தை,கம்சனுக்கு எமனாவான் என்பது வாக்கு!
இதோ வந்துவிட்டது எட்டாவது,செய்தி அறிந்தவுடன் விரைகின்றான் கம்சன்.
என்ன ஒரு வேகமாய்விரைகின்றான் கம்சன்!தாய் மாமன் அந்த குழந்தைக்கு! 

இந்த வேகம் தன் தங்கை மகவை கொஞ்சி மகிழவா?இல்லை !இப்படியும் 
ஒரு பிஞ்சுதனை ,நஞ்செனவே நசுக்கி கொள்ளவே விரைகின்றான் நடக்குமோ!
தேவகி கலக்கமுற்றாள்,முன் எழுவர் சென்ற பாதை இதுவும் செல்லுமோ என்று?
கம்சன் வந்தான்,பிள்ளை தனை கையில் ஏந்தி,வீசிட்டான் சுவற்றை நோக்கி,

வீசிய பிள்ளை,மேலே உயர்ந்தது ,அந்தரத்தில் நின்றது,அழகாய் சிரித்தது 
மாய தேவியவள்,மாயவனின் சோதரி,எச்சரிக்கை விட்டால் கம்சனுக்கே!
அடே!கம்சா!உன் அழிவு நெருங்கியது!உனை அழிக்கும் பிள்ளை நானல்ல!
அது பத்திரமாய் வளர்கிறது,வேண்டிய இடத்தில் என சத்தியத்தையும் உரைத்து 


மாயமாய் மறைந்தது மாயை!மனதினில் கடும் பயம் உறைய,கடும் சொல் உதிர்த்து 
பூட்டிய கதவு ,பூட்டியபடி இருக்க,இது எப்படி சாத்தியமென கர்ஜித்தான் 

கடிந்திட்டான்,காவலரை,கலவரமாவது,இப்போது அவன் முறையானது!
தன் எதிரி எங்கே என தேடி,தேடி அலைகின்றான் கம்சன்.காண்பானோ மருகனை?



கிருஷ்ண லீலா-2


கவிதை வழி மட்டும் இன்றி வண்ணப்படம் வாயிலாகவும் கதை தொடர்கிறது!

மாயகண்ணன் பிறந்தான் 
அழகிய மதுரா நகரினிலே,அதிசய சிறை கூடத்திலே!
கம்சன் அவன்,சூதில் தப்பி,தேவகி-வசுதேவர் துயர் துடைக்க,

பெற்றவர் சுயநினைவை நீக்கி,வாயில் காப்பான் மயக்கமுற,
மந்திர வித்தை பல காட்டி ,தாய்மாமன் அவன் கதை முடிக்க,
பிறப்பிலேயே விந்தையாய்,அழாத குழந்தையாய் 
பேசும் அதிசயமாய்,மாயன் அவன் மண் புகுந்தான்!




குட்டி கண்ணன் பயணம்.
மாயன் அவன் ,தேவகியின் மணிவயிறு வாய்த்தவன்,
யாரும் அறியா பொழுதினிலே,மண்ணுலகம் வந்துவிட்டான்.
பிறந்த குழந்தை பேசுமோ?,பேசுமே!அது பரந்தாமன் என்பதனால்.
யாரவன்? மாயவன்,போகும் வழி தானே சொன்னான் தகப்பனிடம்.
என்னை,இவ்விடம் விடுத்து ,கோகுலம் சென்று சேரும்-என!
வசுதேவர் தலையில் சுமக்க,சிறை கதவு தானாய் திறக்க,
வாணம் மழையை கொட்ட,ஆதிசேசன் குடை பிடிக்க,
யமுனை நதி பாதை தர,கண்ணனவன் பயணம் செய்தான்.


கோகுலத்தில் ,நந்தரின் இல்லம் ...
நடு இரவினிலே,மாயா தேவி ,யசோதை தன் கர்பம் விட்டு வந்தாள்,
வசுதேவர் தான் சுமந்து வந்த குழந்தையை யசோதை அருகில் இட்டு,
மாயாதேவியை மாற்றி விட்டார்,வந்த வழி திரும்பி சென்றார்.
யாரேனும் அறிவாரோ மாயவனின் மாயத்தை ?